செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விமலின் ‘மஞ்சள் குடை’

விமலின் ‘மஞ்சள் குடை’

1 minutes read

நடிகர் விமல் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு ‘மஞ்சள் குடை’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சிவம் ராஜாமணி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘மஞ்சள் குடை’. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘வால்டர்’ பட புகழ் நடிகை ஷிரீன் காஞ்ச்வாலா நடிக்கிறார். இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர், ராதா ரவி, வை.ஜி. மகேந்திரன், விஜய் ரிவி ராமர், மாரிமுத்து, ரேணுகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஹரி இசையமைக்கிறார். ஃபேமிலி டிராமா ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை கணேஷ் என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி ஆர் ரமேஷ் மற்றும் நாகர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜாஹிர் உசேன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இன்றைய சூழலில் நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய போராட்டம் வீட்டு வாடகை தான். அதனால் நடுத்தர வர்க்கத்து நாயகன் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். அதற்காக அவர் சந்திக்கும் போராட்டங்களும், சம்பவங்களும் தான் படத்தின் கதை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது. இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.” என்றார்.

விமல் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ என்ற வலைதளத் தொடர் அவருக்கு நற்பெயரை சம்பாதித்து அளித்திருப்பதால் அவர் நடிப்பில் தயாராகும் ‘மஞ்சள் குடை’ திரைப்படத்திற்ம் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More