செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு |கணவனும் மனைவியும் கைது

20 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு |கணவனும் மனைவியும் கைது

0 minutes read

20 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு பொருட்களுடன் கணவனும் மனைவியும் பதுளை பொலிஸாரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

60 வயதுடைய கணவனும் அவரின் 57 வயதான மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை, பஹலவத்தையில் உள்ள சந்தேக நபர்களின் வீட்டிலிருந்து, வீடுகளை உடைத்து திருடப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள், சமையல் எரிவாயு அடுப்புகள், மின்சார உபகரணங்கள், சங்கீத உபகரணங்கள், காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவரை குறித்த தம்பதியினர் பயன்படுத்தி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய இளைஞரை கைது செய்வதற்கான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More