செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் கடைசி பாடல் யூ டியூப்பிலிருந்து நீக்கம்

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் கடைசி பாடல் யூ டியூப்பிலிருந்து நீக்கம்

0 minutes read

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு இசையமைத்த இந்த பாடல் சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாயைப் பற்றிப் பேசுகிறது. இந்த இசை வீடியோ கடந்த ஜூன் 23 அன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பஞ்சாபி பாடகரான சித்து மூஸ் வாலாவின் கடைசி பாடலான பஞ்சாபின் தண்ணீர் பிரச்சினை குறித்து பேசும் எஸ்ஒய்எல் (SYL) என்ற பாடல் யூ டியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து இந்தப் பாடல் தற்போது வரை 2.7 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் 33 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More