செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நூற்றுக்கணக்கான பாம்புகளுடன் ஊர்வலம் ; நாகபஞ்சமியை முன்னிட்டு பீகாரில் பாம்பு திருவிழா

நூற்றுக்கணக்கான பாம்புகளுடன் ஊர்வலம் ; நாகபஞ்சமியை முன்னிட்டு பீகாரில் பாம்பு திருவிழா

1 minutes read
பீகாரில் நாகபஞ்சமியை முன்னிட்டு பாம்பு திருவிழா வினோதமான முறையில் கொண்டாடப்பட்டுள்ளது . பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள காளி கோயிலில் நாகபஞ்சமியை முன்னிட்டு ஆண்டு தோறும் பாம்பு திருவிழா நடத்தப்படுகிறது . இதில் அந்த மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள பாம்பாட்டிகள் கலந்து கொள்வர் . நாகபஞ்சமியை முன்னிட்டு இம்முறை நடைபெற்ற திருவிழாவில் பாம்பாட்டிகளும், கிராம மக்களும் ஆற்றில் இறங்கி, மீன்பிடிப்பதை போல ஆர்வமுடன் பாம்புகளை பிடித்தனர். கைகளிலும், தலையிலும், கழுத்திலும் உயிருடன் உள்ள பாம்புகளை சுற்றிக்கொண்டு, மேளதாளமுடன் ஊர்வலமாக சென்றனர்.

பாம்புகளுடன் கோயிலை அடைந்த பின், அவற்றிக்கு ஆரத்தி காட்டப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது. பாம்பு திருவிழா பரம்பரை பரம்பரையாக கொண்டாடப்படுவதாக கூறும் பாம்பாட்டிகள், இத்திருவிழாவில் பங்கேற்றால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அம்மனின் அருள் இருப்பதால், விஷப்பாம்புகளாகவே இருந்தாலும், அவற்றால் தங்களுக்கு தீங்கு ஏற்பட்டதில்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே பக்தி என்ற பெயரில் பாம்புகளை கொடுமைப்படுத்தக்கூடாது என்று விலங்குநல ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளன

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More