செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை துப்பாக்கிகளுடன் இருவர் கைது

துப்பாக்கிகளுடன் இருவர் கைது

1 minutes read

நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கஹவத்த

கஹவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கலலெல்ல பிரதேசத்தில் கஹவத்த பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய கஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார் .

சம்பவம் தொடர்பில் கஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

ரம்புக்கனை

ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பத்தம்பிட்டிய பிரதேசத்தில் ரம்புக்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 64 வயதுடைய பத்தம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த   ஒருவராவார். சந்தேகநபர் மாவனெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளார்.

சம்பவம் தொடர்பில் ரம்புக்களை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More