செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். பல்கலைக்கழகத்தில் தொடரும் பகிடிவதைகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் தொடரும் பகிடிவதைகள்

1 minutes read

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை பகிடிவதைக்குட்படுத்தும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது.

கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் 19கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21பேருக்கு வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம்மாணவர்கள், தடைக்காலத்தில் பல்கலைக்கழக வளாகத்தினுள்ளோ, மாணவர் விடுதிக்குள்ளோ உட்பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கலைப்பீடத்தின் புதிய மாணவர் ஒருவரை பாலசிங்கம் விடுதியில் வைத்து பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், மூத்த மாணவர் ஒருவருக்கு விசாரணைகள் முடிவடையும் வரை தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாயிலுக்கு அருகில் பகிடிவதை புரிந்து தாக்கிய குற்றச்சாட்டில், விஞ்ஞான பீட மூத்த மாணவர்கள் இருவருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுமுக மாணவர்களை கடந்த மாதம் தெல்லிப்பளை பகுதிக்குஅழைத்து, பகிடிவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கலைப்பீடமாணவர்கள் 18பேருக்கு வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பூர்வாங்க விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More