செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காட்டூனிஸ்ட் அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் மற்றும் புலமைப்பரிசில் நிகழ்வு

காட்டூனிஸ்ட் அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் மற்றும் புலமைப்பரிசில் நிகழ்வு

1 minutes read

மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் Aswin Sutharsan 6 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வும், அவர் ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை (25.09.2022) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெறவுள்ளது.

அஸ்வினின் திருவுருவப்படத்திற்கு நினைவுச்சுடரேற்றல் மற்றும் மலர் மாலை அணிவித்தலுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வில், பிரதம விருந்தினர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு அதிகளின் அஸ்வின் பற்றிய நினைவஞ்சலி உரைகள் இடம்பெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து, அஸ்வின் குடும்பத்தினரால் ஆண்டுதோறு ஊடக கற்கை நெறியை தொடரும் மாணவருக்கு வழங்கப்படும் கற்றல் உதவிக்கான அஸ்வின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தில் இம்முறை யாழ்.பல்கலைக்கழக்தில் துணை வேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட ஊடக கற்கையில் சிறப்பு கலைமாணியாக இரண்டாம் ஆண்டில் கல்வியைத்தொடரும் மாணவி ஒருவருக்கு கற்றல் ஊக்குவிப்புக்கான பணத்தொகையாக ரூபா 50 ஆயிரம்மும் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More