செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நீர் வெறுப்பு நோயினால் 2 வயது குழந்தை உயிரிழப்பு

நீர் வெறுப்பு நோயினால் 2 வயது குழந்தை உயிரிழப்பு

1 minutes read

வாரியபொல கனத்தேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை நீர் வெறுப்பு நோயினால் (Rabies) உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 3 ஆம் திகதி வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் குழந்தையை கடித்துள்ளது.

இந்நிலையில், அந்த நாய் விசர் நாயாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அடுத்து, தடுப்பூசி போடுவதற்காக குழந்தையின் பெற்றோர் வாரியபொல வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும், வாரியபொல வைத்தியசாலையில் விசர் நாய்க்கடிக்கான தடுப்பூசி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் குழந்தையை நிக்கவரட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று செப்டெம்பர் 4, 7 மற்றும் 11 ஆம் திகதிகளில் 3 தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.

மற்றொரு தடுப்பூசி நிலுவையில் இருந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், செப்டம்பர் 21 ஆம் திகதி நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நீர் வெறுப்பு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, குழந்தைக்கு செப்டம்பர் 23ஆம் திகதி உயிரிழந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More