செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இந்தியா – எத்தியோப்பியா ஆகிய நாடுகள் ஆலோசனை

இந்தியா – எத்தியோப்பியா ஆகிய நாடுகள் ஆலோசனை

1 minutes read

ந்தியாவும் எத்தியோப்பியாவும் நான்காவது வெளியுறவு அலுவலக ஆலோசனைகளை (FOCs) நடத்தியுள்ளது. இந்த கூட்டம் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில்  இடம்பெற்றது.

இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்தல் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்த கருத்துக்களை இதன்போது பரிமாறிக்கொண்டனர்.

வெளியுறவு அலுவலக ஆலோசனைகளுக்கு இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலாளர் (கிழக்கு மற்றும் தென்னாபிரிக்கா) புனீத் ஆர் குண்டல் மற்றும் மத்திய கிழக்கு, ஆசியா,  பசுபிக் நாடுகளின் விவகாரங்களுக்கான இயக்குநர் ஜெனரல் டாக்டர் கெபியேஹு கங்கா கெய்டோ ஆகியோர் தலைமை தாங்கினர்.

அரசியல் ஈடுபாடுகள், வர்த்தகம் மற்றும் பொருளாதார விவகாரங்கள், அபிவிருத்தி கூட்டுத் திட்டங்கள், கலாசார மற்றும் தூதரக விவகாரங்கள், உயர்கல்வியில் ஒத்துழைப்பு, மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட விடயங்கள் விவாதிக்கப்பட்டன. பாதுகாப்பு, அறிவியல் போன்ற துறைகளில் ஈடுபாட்டை விரிவுபடுத்தவும்  அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்பம், கல்வி, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து, பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More