செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் கடலட்டை பிடித்தவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

யாழில் கடலட்டை பிடித்தவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

1 minutes read

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரும் தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவரையும் நீதிமன்றில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடற்படையினர் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் கடலட்டை பிடித்து வந்த ஏழு பேர் கடலட்டையுடன் இனங்காணப்பட்டதுடன்,

தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர் இனங்காணப்பட்டு அவரது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடற்கரையோரமாக இருந்த

தங்கூசி வலையும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த எட்டுப்பேரையும் இன்று  திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More