செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் செந்தமிழாய் எங்கும் இசை | பா.உதயன்

செந்தமிழாய் எங்கும் இசை | பா.உதயன்

1 minutes read

காலை புலரும் நேரம்
கடல் கரையில் ஒரு ஓரம்
தானாய் வந்த பறவை எல்லாம்
ஏதோ சொல்லிப்பாடுது

ஏழு கடல் ஓடி வந்து
எத்தனையோ வர்ணம் தீட்டும்
காடு எல்லாம் ஆடி ஆடி
கவிதை பல பேசும்

ஆலமரம் செழித்து நிற்கும்
அன்னைத் தமிழ் இசை பாடும்
பாடி வரும் தென்றல் காற்று
பண் இசைந்து ஓடி வரும்

வசந்தம் எல்லாம் பூத்திருக்கும்
வானம் எங்கும் கவி பாடும்
பச்சை கிளி பறந்து வந்து
மெட்டோடு பாட்டிசைக்கும்

வயல்கள் எங்கும் புல் முளைக்கும்
மழைகள் வந்து நனைந்திருக்கும்
அருகில் ஒரு ஆலமரம்
அங்கு வந்து குயில்கள் கூவும்

செந்தமிழாய் எங்கும் இசை
எட்டுத் திசை ஒலிக்கும்
எம் தமிழே எழுந்து வர
எத்தனையோ மணி ஒலிக்கும்

எங்குமே கவிதை மொழி
எம் தமிழில் உயிர்க்குது
தத்துவத்தின் வாழ்வு தனை
தமிழ் எங்கும் சொல்லுது

சின்னச் சின்ன சிட்டுக் குருவி
கொஞ்சி விளையாடுது
என்னருகில் வந்திருந்து
செந்தமிழில் பேசுது

செம்பருத்தி இதழ் காறி
வண்ண மலர் முகக்காரி
எங்க தமிழ் பூக்காறி
அன்ன நடை நடந்து வர
தன்னைப் போல அழகு என்று
மல்லிகைப் பூ சிரித்திருக்கும்

ஆற்றம் கரை ஓரம்
அன்னை சக்தி வாழும் கோவில் மணி
ஏழு கடலும் ஒலிக்கிறது
எங்கும் அமைதி கொள்கிறது
எங்கிருந்ததோ பெண் ஒருத்தி
ஏழு சுரம் இசைக்கின்றாள்.

பா.உதயன்

✍️

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More