வவுனியா, பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிய அண்ணனை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தந்தையின்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், சகோதரி வசித்து வந்த நிலையில் தனிமையிலிருந்த தங்கையை அண்ணன் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட சகோதரி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் 26 வயதுடைய சகோதரனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.