செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொன் இராமநாதன் குருபூஜை

பொன் இராமநாதன் குருபூஜை

1 minutes read

சைவப் பெரு வள்ளலார் சேர். பொன் இராமநாதனின் 92 வது குருபூஜை தினம் இன்று 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. குரு பூசை தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. தொடர்ந்து பரமேஸ்வரன் ஆலயத்தினுள் உள்ள ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர், சேர்.பொன் இராமநாதனின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட மலர்மாலைகள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதியின் முன்னாள் உள்ள சேர். பொன். இராமநாதனின் திருவுருவச் சிலை மற்றும் பல்கலைக்கழக சபை அறைலுள்ள சேர்.பொன் இராமநாதனின் திருவுருவப் படம் ஆகியவற்றுக்கு அணிவிக்கப்பட்டன.

துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இராமநாதன் அறக்கட்டளையைச் சேர்ந்த பேராசிரியர் த.சிற்றம்பலம், இந்து கற்கைகள் பீடாதிபதி பிரம்மஶ்ரீ ச. பத்மநாபன் ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More