செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பில் இளைஞர் வெட்டிக் கொலை!

கொழும்பில் இளைஞர் வெட்டிக் கொலை!

1 minutes read

இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை – அபோன்சு மாவத்தைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இளைஞருக்கும் மற்றொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியதில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை – அபோன்சு மாவத்தையில் வசித்து வந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைத் தெஹிவளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More