செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் என்னில் இருக்கும் நீ | சங்கரி சிவகணேசன்

என்னில் இருக்கும் நீ | சங்கரி சிவகணேசன்

0 minutes read

என்னில் எஞ்சும்
உன் அடையாளங்களால்
உன்மத்தம் கொண்டு
அலையும் உள்ளத்தின்
சல்லடைத் தேடலின்
ஜென்மத்தின் பலனாய் நீ

ஒவ்வொரு தேடலிலும்
ஆயிரம் அறிதல்
ஒவ்வொரு அறிதலிலும்
ஆயிரம் புரிதல்
ஒவ்வொரு புரிதலும்
ஆயிரம் இணைதல்
என்னில்தான் இருக்கின்றாய் நீ

எனக்குள் ஓடி நான்
ஒழிந்த இடமெல்லாம்
ஔிர்ந்தது நீயே
எட்டுத்திக்கிலிருந்தும்
என்னிடம் பேசினாய்
மௌனமாய்..

காதல்
எல்லா மொழிகளிலும்
மௌனத்தை மொழிபெயர்த்து
கவிதை எழுதத் தொடங்கியது..

சங்கரி சிவகணேசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More