செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சீனு ராமசாமி கவிதை

சீனு ராமசாமி கவிதை

0 minutes read

தருபவன்
பெறுபவன்
கணிப்பவன்
ரசிப்பவன்
காதலிக்கப்படுபவன்
காதலிப்பவன்
அஞ்சுபவன்
அரவணைப்பவன்
இடம் தருபவன்
அடைக்கலம் கேட்பவன்
பிரபஞ்சத் தொடர்பாளன்
பெயர் எழுத விளைபவன்
தடம் பதிக்கத் துடிப்பவன்
நீர் ஊற்றுபவன்.

எவனுமல்ல…

வளர்வது
வாழ்த்துபவன்
மாற்றத்தை
ரட்சிப்பவன்

உண்மைக்கு
உண்மை
துணையிருந்து,
உருத்தெரியாமல்
தெரியாது
காற்றில் கரைபவன்
கவிஞன்.

சீனு ராமசாமி

( கர்மவீரர் காமராஜ் அவர்களுக்கு)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More