பருத்தித்துறை நகர சபை தலைவராக இருந்த யோ. இருதயராஜா, பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்துள்ள நிலையில், புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும் என்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிதாகத் தெரிவு செய்யப்படும் தலைவர் எதிர்வரும் 30ஆம் திகதியளவில் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைக்கும் வகையில் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.