செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச திணைக்கள வீரர்னளுக்கு கௌரவம்

அரச திணைக்கள வீரர்னளுக்கு கௌரவம்

1 minutes read

அரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி சிறைச்சாலை திணைக்களத்திற்காக அதிக பதக்கங்களை பெற்ற வீரர்கள் யாழ்ப்பாணத்தில் கௌரவிக்கப்பட்டனர். 

வெற்றி பெற்றவர்களை வவேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(22) யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகத்தர்களால் நடைபெற்றது. 

யாழ் சிறைச்சாலையின் வீரர்களான யூட் பீரிஸ் உயரம் பாய்தல் போட்டியில் வெள்ளி பதக்கத்தையும், ரி.சி.அன்ரு குண்டு போடுதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் தட்டெறிதலில் வெண்கல பதக்கத்தையும் பெற்றனர். 

எஸ்.சியானியஸ் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கத்தையும், எச்.ஜே.அபேயரத்தன 110 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் வெண்கல பதக்கத்தையும், ஜே.றொகான் 

4 ×400 மீற்றர் அஞ்சல் ஓட்டம் வெண்கல பதக்கத்தையும் 4 ×100 அஞ்சல் ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தையும் என மொத்தமாக 7 பதக்கங்களை பெற்றனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More