0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வசமுள்ள மாவனல்லை பிரதேச சபையின் தவிசாளர் சமந்த ஸ்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி ஒன்றுக்கு அனுமதி வழங்குவதற்காக 20 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் அவர் இலஞ்ச, ஊழல் விசாரணைக் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரது சாரதியும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிளால் கைது செய்யப்பட்டுள்ளார்.