செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தலுக்கு நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தை நாடியது ஆணைக்குழு!

தேர்தலுக்கு நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தை நாடியது ஆணைக்குழு!

1 minutes read

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்துவதற்கான நிதியை விடுவிக்குமாறு நாடாளுமன்றத்திடம் – சபாநாயகரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் கோரியுள்ளது.

இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கடிதம் கிடைக்கப் பெற்றதை சபாநாயகரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போதுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தற்காலிகமானது என்றும், அவர்கள் நாடாளுமன்றத்துக்கே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் நிதி தொடர்பான அதிகாரம் நாடாளுமன்றத்துக்குரியது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை தொடர்ந்து தடையின்றி முன்கொண்டு செல்வதற்கு தேவையான நிதியை விடுவிக்கப் பணிக்குமாறு கோரி சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More