செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ‘சீன ஆய்வுகூடத்தில் இருந்தே கொரோனா கசிந்திருக்கலாம்’

‘சீன ஆய்வுகூடத்தில் இருந்தே கொரோனா கசிந்திருக்கலாம்’

1 minutes read

கொரோனா வைரஸ் தொற்றானது 2019க்குப் பின்னர் உலகையே திருப்பிப் போட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் கிருமி, சீனாவின் ஆய்வுகூடத்தில் இருந்தே கசிந்திருக்கலாம் என அமெரிக்க எரிசக்தித் துறை தற்போது தெரிவித்துள்ளது.

எனினும், இது திட்டமிடப்படாமல் தற்செயலாக நடந்திருக்கலாம் என்றும் அதன்வழியே கொரோனா வைரஸ் தொற்று முழு உலகுக்கும் பரவியிருக்கக் கூடும் என்றும் அமெரிக்க எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வைரஸ் எவ்வாறு ஆரம்பமாகியது என்பது குறித்து அமெரிக்க உளவுத் துறை பல்வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

எனினும், கொரோனா வைரஸ் என்பது, அந்தக் கிருமியால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்தே பரவியிருக்கலாம் என அமெரிக்க தேசியப் புலனாய்வு மன்றம் உள்ளிட்ட மேலும் 4 அமைப்புகள் முன்னர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More