செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பு மக்களுக்கு அசௌகரியம் – நாளை 24 மணிநேர நீர்வெட்டு அமுல்

கொழும்பு மக்களுக்கு அசௌகரியம் – நாளை 24 மணிநேர நீர்வெட்டு அமுல்

1 minutes read

கொழும்பில் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை சனிக்கிழமை (4) பிற்பகல் 2 மணிமுதல், ஞாயிற்றுக்கிழமை(5) பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு 1,2,3,4,7,8,9,10 மற்றும் 11 வரையான பகுதிகளுக்கும், கடுவலை நகரம் அதனை அண்டிய பகுதிகளுக்கும் இவ்வாறு நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.

அத்துடன், கொலன்னாவை நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுக்கும், வெல்லப்பிட்டி, கொட்டிகாவத்தை பகுதிகளுக்கும் குறித்த காலப்பகுதியில் நீர்விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மாளிகாகந்த நீரேந்து நிலையத்துக்கு நீரை விநியோகிக்கும் குழாய் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாக இவ்வாறு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More