0
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்; இன்று நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
தலிபான் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு கட்டடத்துக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.