செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பல பிரதேசங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்!

பல பிரதேசங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்!

1 minutes read

ன்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடிக்கடி மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, வட மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது பல முறை மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.

மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் நிலை: பேருவளையிலிருந்து காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடல் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதோடு, அக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More