செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் புத்தனும் பாவம்! கந்தனும் பாவம்! | சி. கிரிஷாந்த்ராஜ்

புத்தனும் பாவம்! கந்தனும் பாவம்! | சி. கிரிஷாந்த்ராஜ்

0 minutes read

தையிட்டியில் முளைத்த புத்தர்
நல்லூர்க் கந்தனிடம் போய்
அரச மரத்தின் கிளைகளில்
பேரினவாதக் குரங்குகள்
கூடிக் கூத்தடிப்பது பற்றி
புலம்பித் தீர்த்தாராம்!

விகாரை நிர்மாணிக்கக்
கொண்டுவந்த மண்ணில்
தமிழ் மணந்தது பற்றியும்,
தாகத்துக்குக் குடித்த நீரில்
குருதி படிந்திருத்தது பற்றியும்
வியந்து நொந்தாராம்!

கந்தரோடையில்
காணி வாங்கிய பிக்குவின்
காதைத்திருகி,
“நிழலுக்கு ஒதுங்கிய இடத்துக்கு
உரிமை கோராதே முட்டாள்”
என்று சொல்லப் புறப்பட
‘கொன்றுவிடுவார்கள்’
என்று எச்சரித்தாராம் கந்தன்!

புத்தனும் பாவம்!
கந்தனும் பாவம்!

சி. கிரிஷாந்த்ராஜ்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More