செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் புதிய வழக்குகளில் இம்ரான் கானை கைது செய்வதற்கு எதிரான தடை மே 31 வரை நீடிப்பு

புதிய வழக்குகளில் இம்ரான் கானை கைது செய்வதற்கு எதிரான தடை மே 31 வரை நீடிப்பு

0 minutes read

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக மே 9 ஆம் திகதிக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவரை கைது செய்வதற்கு எதிரான விடுக்கப்பட்ட உத்தரவை மே 31 ஆம் திகதிவரை இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது.

அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

பின்னர், இவ்வழக்கில் இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் முன்பிணை வழங்கி இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,  மே 9 ஆம் திகதிக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவரை 31 ஆம் திகதி வரை கைது செய்வதற்கு எதிராக இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More