செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ‘ஜி-7’ உச்சி மாநாடு ஆரம்பம்; ஹிரோஷிமாவில் பாதுகாப்பு தீவிரம்

‘ஜி-7’ உச்சி மாநாடு ஆரம்பம்; ஹிரோஷிமாவில் பாதுகாப்பு தீவிரம்

1 minutes read

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘ஜி-7 ‘ அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று (19) ஆரம்பமாகின்றது.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிற இந்த மாநாடு, எதிர்வரும் 21ஆம் திகதி முடிவடைகிறது.

இந்த ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோ பைடன், ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜப்பான் – ஹிரோஷிமாவில் குவிந்துள்ளனர்.

இதனையடுத்து, ஹிரோஷிமா நகரம், பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் 7 உறுப்பு நாடுகளுடன் இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ் மற்றும் குக் தீவு ஆகிய 7 நாடுகளும் விசேட அழைப்பின்பேரில் கலந்துகொள்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனையும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கையும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

‘ஜி-7’ உச்சிமாநாட்டின்போது, அணுசக்தி பெருக்கத்தின் அபாயங்கள் குறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பிரச்சினை எழுப்பி, விவாதிக்க வழிவகுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

sunak

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More