0
மதுபோதையில் தந்தையை மகன் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்னை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தந்தையும், மகனும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்திருந்த நிலையில் இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது தந்தை மீது மகன் மேற்கொண்ட தாக்குதலில் அதே இடத்தில் 73 வயதான தந்தை உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து 32 வயதான மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.