செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி| தங்கம் வென்ற மேல் மற்றும் தென் மாகாணங்கள்

47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி| தங்கம் வென்ற மேல் மற்றும் தென் மாகாணங்கள்

1 minutes read

47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான தேசிய கயிறு இழுத்தல் போட்டியின் ஆண்கள் பிரிவில் தென் மாகாண அணி வெற்றியீட்டியதுடன், பெண்கள் பிரிவில் மேல் மாகாணம் அணி வெற்றி பெற்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) கொழும்பு, டொரிங்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் ஊவா மாகாணமும், தென் மாகாணமும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் வெற்றியீட்டிய தென் மாகாண அணி தங்கப்பதக்கத்தையும், ஊவா மாகாண அணி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.

தோற்கடிக்கப்பட்ட வட மத்திய மாகாணத்தை தோற்கடித்த வடமேல் மாகாண அணி மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

இதேவேளை, பெண்களுக்கான இறுதிப் போட்டியில் மத்திய மாகாண அணியை வீழ்த்திய மேல் மாகாண அணி தங்கப்பதக்கத்தை வென்றிருந்ததுடன், தோல்வியடைந்த மத்திய மாகாண அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

பெண்களுக்கான மூன்றாவது இடத்துக்கான போட்டியில், சப்ரகமுவ மாகாணத்தை தோற்கடித்த தென் மாகாண அணி வெற்றியீட்டி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More