செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரையும் கடித உறையும் வெளியீடு!

ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரையும் கடித உறையும் வெளியீடு!

2 minutes read

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

வெகுசன ஊடகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் நினைவு முத்திரையும் கடித உறையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஆறுமுகம் தொண்டமானின் மனைவி திருமதி. ராஜலட்சுமி தொண்டமான் ஆகியோருக்கு நினைவு முத்திரையும் கடித உறையும் வழங்கப்பட்டன.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, கெஹலிய ரம்புக்வெல, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, நஸீர் அஹமட், மனுஷ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்த்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, சீ.பி. ரத்நாயக்க, தபால் மா அதிபர் எஸ். ஆர். டபிள்யூ. எம். ஆர். பி சத்குமார மற்றும் ஆறுமுகம் தொண்டமானின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More