அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
“ஹாலிவுட்“ என்ற பகுதியிலுள்ள கடற்கரை நடைபாதையில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளதாக, ப்ளோரிடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒன்பது பேரில் 1 வயது குழந்தை முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடுகளிலிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள நடைபாதைக்கு அருகில் காணப்பட்ட மரங்களுக்கு பின்னால் மக்கள் ஓடுவதை இந்த சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.
ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு முன்னால் பல இளைஞர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலர் அருகிலுள்ள சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் ப்ளோரிடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.