செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மதிய உணவு நஞ்சானதால் இளம் தாய் பரிதாப மரணம்! 

மதிய உணவு நஞ்சானதால் இளம் தாய் பரிதாப மரணம்! 

0 minutes read

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் சமைத்து உண்ட உணவு நஞ்சாகியதில் இளம் தாய் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்

மாங்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான உஷேந்தினி (வயது 27) என்பவரே இல்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்து பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான இன்று மதிய உணவை உண்ட பின்னர் பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்த பெண், அவரது 4 மற்றும் 7 வயது இரு குழந்தைகள், அவரது தாயார் உட்பட 4 பேர் வாந்தியெடுத்த நிலையில் மயங்கினர்.

அவர்கள் உடனடியாக கஞவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் 27 வயதுடைய பெண் உயிரிழந்தார். ஏனைய மூவரும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More