அமெரிக்காவுக்கு 4 நாட்கள்உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக பணக்காரர் எலான் மஸ்க்கை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின் பேசிய எலான் மஸ்க், “நான் மோடியின் ரசிகன். இந்தியா மீது மோடி மிகவும் அக்கறைக்காட்டுகிறார். ஏனென்றால் இந்தியாவில் முதலீடு செய்யும்படி மோடி எங்களை வலியுறுத்துகிறார்.
“இந்திய சந்தைக்குள் டெஸ்லா கார்கள் கூடிய விரைவில் நுழையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதற்கு ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி.
கூடிய விரைவில் இதற்காக நாங்கள் அறிவிப்போம் என நம்புகிறேன். நான் அடுத்த ஆண்டு இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளேன். பிற பெரிய நாடுகளை விட இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது” என்றார்.