செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவு மனிதப் புதைகுழி இடத்தில் பரபரப்பு! – அகழ்வுப் பணி முன்னெடுப்பு

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி இடத்தில் பரபரப்பு! – அகழ்வுப் பணி முன்னெடுப்பு

2 minutes read

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் நீதிபதி முன்னிலையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் பலரும் களத்துக்குச் சென்றுள்ளனர்.

இதேவேளை, அங்கு பொதுமக்கள் அதிகளவானோர் சென்றுள்ளனர் எனவும், அதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More