செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் இரவின் மடியில் | கேசுதன்

இரவின் மடியில் | கேசுதன்

0 minutes read

 

விழி கோர்க்கும் நன்னிசி நேர
உன் இமைகோர்க்கும் பொழுதுகளும்
ஒரு சாளரம்
தாலாட்டும் பால்நிலா ஒளியில்
உன் கரங்களோரம் உரசிடும்
அவன் தேகம்

அவன் தேகம் தொடும் தூரம்
சிலிர்த்திடும் உன் பொன்மான் மேனி
வர்ணங்கள் பூசித்த தேகமும்
ஒன்றால் இணைத்திடுமாம்
அந்நேரம்

காரிருள் அகற்றிய பொன்வானமும்
தேன்நிலவாய் தேகமருவிடும்
சில்லென்று தூரிய செங்காற்றும்
கலவியெனும் கானம் பாடும்

செல்களை துறந்து ஊசலாடிய
உணர்வுகளும் ஒருகணம்
திமிருமே உன்கருவிழியோரம்
ஓடிய காலமும் தேடிய வாழ்க்கையும்
ஒரு இரவினில்
பனி விழும் மலர்வணமாய்!

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More