செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குளவி கொட்டி வயோதிபப் பெண் பரிதாப மரணம்!

குளவி கொட்டி வயோதிபப் பெண் பரிதாப மரணம்!

0 minutes read

குளவி கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் இன்று (17) உயிரிழந்தார்.

லிந்துலை – பம்பரகலை தோட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

பம்பரகலை மத்திய பிரிவைச் சேர்ந்த 80 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற நிலையில், வீட்டிலிருந்த அவர், நாட்சம்பள அடிப்படையில் தேயிலைத் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்தநிலையில், வழமைபோல் இன்று கொழுந்து பறித்து கொண்டிருந்தபோதே அவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினார்.

இதையடுத்து, உடனடியாக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More