செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வலி சுமந்த நெஞ்சம் | டிலக்சி

வலி சுமந்த நெஞ்சம் | டிலக்சி

0 minutes read

 

வலி சுமந்த நெஞ்சில்
இன்றைய நாள் வடுக்கள்
ஆறிடுமோ?
அவை தான் மாறிடுமோ?

வெள்ளருவி பாயும்
எம் தேசத்தில்
இன்றைய நாள்
செந்தெருவி வீதி வீதியாய்
பாய்ந்ததை எம் நெஞ்சம் தான்
மறந்திடுமோ?

சிந்திய குருதியை
அள்ளி பருகிட்ட
ஈன ஜாதியினரை
மன்னிக்குமா?எம்
தமிழ் இனம் தான்

வலி பொருத்து
எமை ஈன்ற தாய்க்கு
நிகராக எமை சுமந்த
எம்  தமிழ் மண்ணும்
இறந்து கிடந்தாள்
ஈழப்போரில் இன்றைய நாளில்

தமிழினமே
அழிந்து போனது
அதர்மமே தலை தூக்கி
தர்மத்தை அழித்தது
இன்றொரு நாள்!!!

இறந்து போன உயிர்களை
நாம் மறைந்து போனாலும்
மறந்து போகாமல்
நினைந்திடுமே எம்
வலி சுமந்த நெஞ்சம்

முள்ளிவாய்க்கால்
நினைவுகள் மூழ்கவில்லை இன்னும்
ஆறாத வடுக்களாய்
தீயாய் எம்
நெஞ்சில்
என்றும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More