செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வாழ்வியல் | கேசுதன்

வாழ்வியல் | கேசுதன்

0 minutes read

 

குற்றங்களாலும் குறைகளாலும் சூழப்பட்ட
மனித வாழ்வில் வலிகள் மறைக்கப்பட்ட
மனங்களுக்கிடையே வாழ்வியல் வளர்க்கும்
நெஞ்சங்களும் உண்றல்லவோ

பாறையிடுக்கில் படரும் பாசிகள் போல
நெஞ்சத்து வடுக்களை சுமந்த தேகங்களும்
ஒற்றை உயிராய் சிலிர்த்து நிற்கும்

தேகமோடு வாழ வழிதந்த இறைவன்
வடுக்களையும் தர மறுப்பதில்லை
துன்புறா நெஞ்மொன்று தடம்மாறாதென்பதல்ல

குறைகளை கண்டிரா மனமும் குற்றம்
காண்பதே காலத்தின் வடு
தொய்வுற்ற நெஞ்சமும் செங்காலை
விடியற்காணவே தெளிவோடு மயங்கும்

கீற்றுக்கள் ஒலிப்பதெல்லாம் ஒரு காலம்
கட்டாயத்தின் பெயரில் வளர்க்கப்பட்ட
கட்டிடங்களின் நடுவே இரைச்சல்களுடன்
கூடிய ஊர்திகளும் கூவிச்செல்லும்

வடுக்களை சுமந்த மனங்களும் இறைவனை
தேடும் ஒரு பொழுதாய் அமையலாயிற்று
அவனுக்கோர் பொழுதுபோக்காய் பம்பரமாய்
ஆட்டுவிப்பான்

தீன் சுவைத்தந்த கைவண்ணமும் இயந்தியமயமாயிற்று வழிசொல்வார் வருவாரோ
இடையில் சுமந்த குடமும் இல்லை
பானையில் வடித்த சோறுமில்லை என்றாயிற்று

வாழ்வியலும் இயந்திரமயமானது மக்கள் நெஞ்சத்து குற்றங்களும் குறைகளும் இலைமறை காயாக ஒன்றித்தே ஒழிக்கப்படுகிறது வாழ்வியலின்
இரகசியமாய்….

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More