செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் எது நிறைவு அன்பே | த. செல்வா

எது நிறைவு அன்பே | த. செல்வா

0 minutes read

அசிங்கம் துப்பிய சந்தேக எச்சிலைக் கொட்டுகிறாய்
நானோ வியர் நிறைத்த பெருங்குடலிலிருந்து ஏப்பம் இறைக்கிறேன்
எது நிறைவு அன்பே

நீ ஒரு மோகனப் புன்னகை தருவாய்
அதுதான் உயர்ரக பொன்னகையென எழுதி வைத்து ஆனந்தித்தேன்
நீயோ பெற்றோலுக்கலையும் முதலாளித்துவம் போல் பொன்னுக்கு போகமானாயே

உன் மடிதான் என் ஆறுதல்ப் பெருவெளி என்றிருந்தேன்
நீ மாபிளின் மாளிகைமீது மசோதா தயாரித்து உன்னை உயர்த்தினாய்

நீயும் நானும் தெருவெல்லாம் சண்டையிட்டாலென்ன
சந்தேகித்தாலென்ன
சந்தோசித்தாலென்ன
அது நம் காதல் சங்கதி
ஆனால் நீயோ இன்று துரோகிகளுடன் கூட்டுச் சென்று குருந்தூர் மலை புத்தர் போல
என் மான அறை எங்கிலும் அன்பில்லாமல் ஆக்கிரமித்துவிட்டாயே

எனக்கொன்று புரியவில்லை பெண்ணே
அன்பில்லாமல்
சிங்களன் தமிழன் சண்டை போல் வீழப்போகிறோமா
துரோகத்தின் துருப்பிடித்த அறியாமையால் அலங்கோலப்படுவோமா

காலம் நம்பக்கமென்றால்
ஈழம் போல்
கனவையேனும் சுமப்போம்
நமது காதலும்
தமிழீழக் கனவும் துரோகத்தால் நிறைந்த தூய பூக்களாக மாதிரிக்கென்றாலும் பூத்துக் குலுங்கட்டும்

ஆறுதலுக்கு சொற்ப புன்னகையும் லட்சம் கண்ணீரையும் இறைத்து நிறைவேகலாமல்லவா

த.செல்வா
இரவு 11.56

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More