செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் பொருட்கள் திருட்டு

இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் பொருட்கள் திருட்டு

0 minutes read

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற திருட்டு தொடர்பில் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அருங்காட்சியகத்தில் கி.மு. 15-ம் நூற்றாண்டு முதல் கி.பி.19-ம் நூற்றாண்டு வரையிலான பழங்கால நகைகள், வைர கற்கள், கண்ணாடிகள் போன்ற பல்வேறு பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அவ்வப்போது இங்கு கண்காட்சிகள் நடத்தப்படுவதால் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் பேர் இதனை பார்வையிடுகின்றனர்.

இந்தநிலையில் தற்போது அருங்காட்சியகத்தில் நடத்திய ஆய்வின்போது சில விலைமதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

ஆனால், அண்மைகாலமாக அங்கு கண்காட்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை. எனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த கண்காட்சியின்போது இவை திருடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊழியர் ஒருவரை பணிநீக்கம் செய்து அருங்காட்சியகத்தின் தலைவர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

மேலும் திருடப்பட்ட பொருட்களை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More