தனியார் விடுதியொன்றில் காதலியுடன் தங்கியிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவர்.
அந்த நபர் தனது கள்ளக்காதலியுடன் விடுதிக்கு வந்துள்ளார் என்று ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நேற்று மதியம் ஒரு மணியளவில் அவர் விடுதியில் திடீரென விழுந்திருந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.