செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க முடியாது! – கல்வி அமைச்சர் திட்டவட்டம்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க முடியாது! – கல்வி அமைச்சர் திட்டவட்டம்

0 minutes read

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை (2023) ஒத்திவைக்கப்பட்டால் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடத்திட்டத்தின் நிறைவு பாதிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்ட அரச மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், இது நியாயமற்றது எனவும், மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் நேரம் போதுமானதாக இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More