செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அநாதிகளின் பாடல் | வில்வரசன்

அநாதிகளின் பாடல் | வில்வரசன்

0 minutes read

 

வனாந்தரத்தில் அனாதியாய்
தனித்து விடப்பட்ட விலங்குகள்
யாரிடமும் கேட்பதில்லை
வீடு திரும்புதலுக்கான வழிகளை

காகக் கூட்டில்
ஏதிலிகளாய் கைவிடப்பட்ட
இளங்குயில்கள் மறந்து போவதில்லை
தங்கள் பழைய கீதங்களை

மந்தைக் கூட்டமொன்றிலிருந்து
தவறுண்டு போன
செம்மறிக்குட்டிகளின் ஓலம்
கேட்பதே இல்லை
எந்த மேய்ப்பர்களுக்கும்

வௌவால்களும்
காகங்களும் கூட
வீடடையும் இந்த அந்தியில்
முகவரிகளற்ற
அனாதைச்சிறுவர்கள் வானத்தில்
துலாவிக் கொண்டிருக்கின்றனர்
தம் வீட்டின் நிழலை..

வில்வரசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More