அவ்வளவு வேகமாய்
என் பிரம்பு பாய்ந்திருக்கத் தேவையில்லை
நாள் பூராகவும்
உடல் நோக
தொண்டை வலிக்க
உரத்துக் கற்பித்த நாவுகள்
வகுப்பறையில்
அவன் கூக்குரல் கண்டு
கொஞ்சம்
கோபப்பட்டிருக்க வேண்டும்
“எழும்படா முதல் ”
என்ற படி
மாரியம்மன் கோவில்க்
கிடாய் வெட்டும் கத்தியாய்க்
கோபமாய் பாய்கின்றது
என் பிரம்பு
கண்கள் கசிய
உள்ளங்கைகள் வெடித்து
கலங்கிப் போய்
பவ்வியமாய்
எழுந்து நிற்கும்
அவன் முன்னால்
இப்பொழுது
தோற்றுபோய் புன்னைக்கிறது
நான் கற்பித்துக் கொண்டிருந்த வெகுளாமை
அதிகாரம்.
வில்வரசன்