செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இணையத்தளம் ஊடாக வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக பண மோசடி செய்தவர் கைது

இணையத்தளம் ஊடாக வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக பண மோசடி செய்தவர் கைது

0 minutes read

இணையத்தளங்கள் மூலம் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத் தருவதாக கூறி 90 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபர் கொழும்பு ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்  34 வயது கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

குறித்த நபர் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு  3 வங்கிக் கணக்குகள் மற்றும் 72 இலட்சம் ரூபாய் பணம் இருப்பதாகவும் ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை (13) கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More