செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வட, கிழக்கில் ஹர்த்தாலிலும் பாடசாலைகள் வழமை போன்று இயங்கின

வட, கிழக்கில் ஹர்த்தாலிலும் பாடசாலைகள் வழமை போன்று இயங்கின

1 minutes read

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகளில் மாணவர்களின் வருகையோடு வழமை போன்று இயங்கியது.

வடக்கு மாகாண பாடசாலைகளில் 98 சதவீத வரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்று வெள்ளிக்கிழமை (20) தமிழ்  கட்சிகளினால் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றையதினம் தமிழ் கட்சிகள் விடுத்த அறிக்கையில், பாடசாலைகளையும் புறக்கணியுங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்   பாடசாலைகள் வழமை போல் இயங்குகின்ற நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் தவணை பரீட்சை இடம் பெறுகின்றதன் காரணமாக வடக்கு மாகாண பாடசாலைகளில் 98 வீதமான மாணவர்களின் வருகை காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருகை சில பாடசாலைகளில் குறைவடைந்துள்ள போதிலும் ஏனைய தீவக வலயம் உட்பட சகல பாடசாலைகளிலும் 98 வீதமான மாணவர்களின் வரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பில், சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தராதிருந்தபோது பல பாடசாலைகளுக்கு 50 வீதமான மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.

பாடசாலைகளில் இருந்து மாணவர்களுக்கு பரீட்சை காலை 9-30 மணிக்கு இடம்பெறும் என அறிவித்ததையடுத்து பொற்றோர் அல்லோலகல்லோலப்பட்டக் கொண்டு ஹர்த்தால் காரணமாக வீட்டில் இருந்த மாணவர்கள் உடனடியாக பெற்றோர் அவசர அவசரமாக அழைத்துச் சென்று பாடசாலைக்கு அனுப்பினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More