செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மகனுடன் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் காட்டு யானை தாக்கியதில் பலி

மகனுடன் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் காட்டு யானை தாக்கியதில் பலி

0 minutes read

தனது மகனுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திறப்பனை, நிரவிய பகுதியைச் சேர்ந்த லலிதா குமாரி சந்திரலதா என்ற 50 வயதுடைய நபர் ஆவார்.

இவர் தனது 31 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்த போது வீதியில் காணப்பட்ட காட்டு யானையால் தாக்கப்பட்டுள்ளார்.

பின்னர்  இவர் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மகனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திறப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More