வடக்கு காசாவில் அல் ஷிபா மற்றும் அல் குத்ஸ் எனும் 2 வைத்தியசாலைகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் புதிய நோயாளிகளுக்கு அனுமதியின்றி மூடப்பட்டுள்ளன.
அங்கு எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால், முன்னரே அனுமதிக்கப்பட்டுள்ள பல நோயாளிகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அல் ஷிபா வைத்தியசாலையில் 1500 நோயாளிகள் மற்றும் 1500 மருத்துவ பணியாளர்களும் உள்ளதுடன், ஆங்காங்கே நடைபெறும் குண்டு வெடிப்புகளால், சுமார் 15 ஆயிரம் பேர் அங்கு புகலிடம் தேடி வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலை வாசலிலேயே ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் சண்டை நடப்பதாகவும் மக்கள் வெளியேற உதவுவதாக இஸ்ரேல் கூறுவது உண்மையில்லை என்றும் மருத்துவ பணியாளர்கள் கூறியுள்ளனர்.
காசா மருத்துவமனைகளை ஹமாஸ் மறைவிடங்களாக பயன்படுத்துவதால் அவற்றின் அருகே தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், மருத்துவமனைகளை அவ்வாறு பயன்படுத்தவில்லை என ஹமாஸ் கூறியுள்ளது.
இந்த நிலையில், அங்கு புகலிடம் தேடி சென்றுள்ள 15,000 பேரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.