நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (13) ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ,யுவதி நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தங்கொட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 27 வயது இளைஞரும் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 22 வயது யுவதியும் ஆவர்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது யுவதியிடமிருந்து 06 கிராம் 200 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளும் இளைஞரிடத்திலிருந்து 05கிராம் 300 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.