கல்லறைகள் இல்லைத்தான்
ஆனாலும் விளக்கெரிக்கிறார்கள்
ஊதுபத்தி கொழுத்தி தூபம் காட்டுகிறார்கள்
பொங்கிப் படைக்கவும் செய்கிறார்கள்
இன்னும் சில நாட்களில்
பூக்களோடும் மாலைகளோடும்
அவர்கள் தம் இஸ்ர தெய்வங்களோடு பேசிக்கொள்ளவும் அழுது அழுது வரம் கேட்கவும்
சிரித்து மகிழ்ந்திருக்கவும்
உறவுகள் நண்பர்களோடு திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்
அந்தப் புனித பூமியை நோக்கிப்
பாதயாத்திரை செல்வார்கள்
பூக்களையும் மாலைகளையும்
மண்ணுக்கும் கல்லுக்குமாய் வைத்து
மனமுருகி வழிபாடு செய்வார்கள்
எம்மைக் காத்து நின்ற தஎய்வங்களை வழிபாடு செய்வார்கள்.
காவலூர் அகிலன்